கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை மாநகர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 11 பெண்களுக்கு தையல் இயந்திரம், 4 பேருக்கு இஸ்திரிப்பெட்டி, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பெட்டிக்கடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையம் பகுதியில் நலத்திட்ட உதவிகள், பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

கோவை மாநகர தலைவர் டேவிட் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 11 பெண்களுக்கு தையல் இயந்திரம், 4 பேருக்கு இஸ்திரிப்பெட்டி, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பெட்டிக்கடை, கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி தொகை வழங்குதல், அரசு பள்ளிக்கு குடிநீர் தொட்டி, அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவு தட்டுகள் போன்றவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...