கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை மாநகர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 11 பெண்களுக்கு தையல் இயந்திரம், 4 பேருக்கு இஸ்திரிப்பெட்டி, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பெட்டிக்கடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையம் பகுதியில் நலத்திட்ட உதவிகள், பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

கோவை மாநகர தலைவர் டேவிட் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 11 பெண்களுக்கு தையல் இயந்திரம், 4 பேருக்கு இஸ்திரிப்பெட்டி, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பெட்டிக்கடை, கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி தொகை வழங்குதல், அரசு பள்ளிக்கு குடிநீர் தொட்டி, அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவு தட்டுகள் போன்றவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...