ஈச்சனாரியில் தனியார் நர்சிங் கல்லூரி பொது செவிலியர் மற்றும் தாதியர் படிப்பு மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

தரச்சான்றிதழ் உள்ளது என்று கூறி கல்லூரி நிர்வாகம் தங்களை ஏமாற்றியதாக கூறி 3 நாட்களாக அபிராமி நர்சிங் கல்லூரி மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை ஈச்சனாரி அருகே செயல்பட்டு வரும் அபிராமி நர்சிங் கல்லூரியில், பி.எஸ்.சி நர்சிங் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கூடுதலாக GNM (பொது செவிலியர் மற்றும் தாதியர்) புதிய படிப்பை இணைத்துள்ளனர். இதில், கேரளா மற்றும் தமிழக மாணவ, மாணவிகள் படித்து வந்தாலும், பெரும்பாலானோர் கேரளாவை சேர்ந்த மாணவிகளே பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இக்கல்லூரியில் பொது செவிலியர் மற்றும் தாதியர் படிப்பை முடித்த மாணவர்களுக்கு INC என்ற வெளிநாட்டிற்கு சென்று பணியாற்றும் தகுதிச் சான்றிதழ் கல்லூரி நிர்வாகம் வழங்காமல் இருந்ததாக தெரிகிறது.



விசாரணையில், அந்த தரச்சான்றிதழ் அக்கல்லூரியில் இல்லை என தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள், தங்களை ஏமாற்றி கல்லூரியில் சேர்ந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், நடப்பு ஆண்டில் அந்த படிப்பில் சேரந்தவர்கள் தங்கள் கட்டணம் மட்டும் சான்றிதழை திரும்ப தர வலியுறுத்தி போராடி வருகின்றனர்.



கடந்த 4 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து வரும் மாணவிகள், சுகாதாரத்துறை மற்றும் மதுக்கரை போலீசில் புகாரும் அளித்துள்ளனர். ஆனாலும், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதால், அக்கல்லூரி மாணவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.



3 நாட்களாக போராடி வரும் மாணவிகள், உடனடியாக அவர்களது மனு மீது நடவடிக்கை எடுத்து சான்றிதழ் கட்டணம் மற்றும் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...