கோவையில் இருந்து வெடிப்பொருள் தயாரிக்கும் மூலப்பொருட்களை ஆன்லைனில் வாங்கிய இளைஞர் கைது

கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (26) என்பவர் ஆன்லைன் மூலம் வெடிபொருள் தயாரிக்கும் மூலப்பொருட்களை ஆடர் செய்த நிலையில், சரவணம்பட்டி போலீசார் 1908-வெடி பொருள் சட்டப்பிரிவு 4(b) கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.


கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஆன்லைனில் பொட்டாசியம் உள்ளிட்ட மூலப்பொருட்களை வாங்கும் நபர்களை மாநகர போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆன்லைன் மூலம் ஆடர் செய்த மாரியப்பன் என்பவரை கண்காணித்து வந்த போலீசார், அவர் ஆர்டரை வாங்கும் போது அவரை மடக்கி பிடித்தனர். பின்னர், மாரியப்பனை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், மாரியப்பன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், மேலும், மாரியப்பன் தனது எதிரியான மகாராஜன் என்பவரை கொலை செய்ய போடப்பட்ட திட்டத்திற்காக தான் ஆன்லைன் மூலம் வெடி பொருட்களை வாங்கியதும் தெரியவந்தது.

விசாரணைக்கு பின்னர், மாரியப்பன் மீது சரவணம்பட்டி போலீசார் 1908-வெடி பொருள் சட்ட பிரிவு 4(b) இன் (Explosive act) கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். தற்போது, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...