கோவையில் இருந்து வெடிப்பொருள் தயாரிக்கும் மூலப்பொருட்களை ஆன்லைனில் வாங்கிய இளைஞர் கைது

கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (26) என்பவர் ஆன்லைன் மூலம் வெடிபொருள் தயாரிக்கும் மூலப்பொருட்களை ஆடர் செய்த நிலையில், சரவணம்பட்டி போலீசார் 1908-வெடி பொருள் சட்டப்பிரிவு 4(b) கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.


கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஆன்லைனில் பொட்டாசியம் உள்ளிட்ட மூலப்பொருட்களை வாங்கும் நபர்களை மாநகர போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆன்லைன் மூலம் ஆடர் செய்த மாரியப்பன் என்பவரை கண்காணித்து வந்த போலீசார், அவர் ஆர்டரை வாங்கும் போது அவரை மடக்கி பிடித்தனர். பின்னர், மாரியப்பனை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், மாரியப்பன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், மேலும், மாரியப்பன் தனது எதிரியான மகாராஜன் என்பவரை கொலை செய்ய போடப்பட்ட திட்டத்திற்காக தான் ஆன்லைன் மூலம் வெடி பொருட்களை வாங்கியதும் தெரியவந்தது.

விசாரணைக்கு பின்னர், மாரியப்பன் மீது சரவணம்பட்டி போலீசார் 1908-வெடி பொருள் சட்ட பிரிவு 4(b) இன் (Explosive act) கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். தற்போது, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...