கோவையில் இருந்து வெடிப்பொருள் தயாரிக்கும் மூலப்பொருட்களை ஆன்லைனில் வாங்கிய இளைஞர் கைது

கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (26) என்பவர் ஆன்லைன் மூலம் வெடிபொருள் தயாரிக்கும் மூலப்பொருட்களை ஆடர் செய்த நிலையில், சரவணம்பட்டி போலீசார் 1908-வெடி பொருள் சட்டப்பிரிவு 4(b) கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.


கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஆன்லைனில் பொட்டாசியம் உள்ளிட்ட மூலப்பொருட்களை வாங்கும் நபர்களை மாநகர போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆன்லைன் மூலம் ஆடர் செய்த மாரியப்பன் என்பவரை கண்காணித்து வந்த போலீசார், அவர் ஆர்டரை வாங்கும் போது அவரை மடக்கி பிடித்தனர். பின்னர், மாரியப்பனை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், மாரியப்பன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், மேலும், மாரியப்பன் தனது எதிரியான மகாராஜன் என்பவரை கொலை செய்ய போடப்பட்ட திட்டத்திற்காக தான் ஆன்லைன் மூலம் வெடி பொருட்களை வாங்கியதும் தெரியவந்தது.

விசாரணைக்கு பின்னர், மாரியப்பன் மீது சரவணம்பட்டி போலீசார் 1908-வெடி பொருள் சட்ட பிரிவு 4(b) இன் (Explosive act) கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். தற்போது, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...