கோவையில் இருந்து வெடிப்பொருள் தயாரிக்கும் மூலப்பொருட்களை ஆன்லைனில் வாங்கிய இளைஞர் கைது

கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (26) என்பவர் ஆன்லைன் மூலம் வெடிபொருள் தயாரிக்கும் மூலப்பொருட்களை ஆடர் செய்த நிலையில், சரவணம்பட்டி போலீசார் 1908-வெடி பொருள் சட்டப்பிரிவு 4(b) கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.


கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஆன்லைனில் பொட்டாசியம் உள்ளிட்ட மூலப்பொருட்களை வாங்கும் நபர்களை மாநகர போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆன்லைன் மூலம் ஆடர் செய்த மாரியப்பன் என்பவரை கண்காணித்து வந்த போலீசார், அவர் ஆர்டரை வாங்கும் போது அவரை மடக்கி பிடித்தனர். பின்னர், மாரியப்பனை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், மாரியப்பன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், மேலும், மாரியப்பன் தனது எதிரியான மகாராஜன் என்பவரை கொலை செய்ய போடப்பட்ட திட்டத்திற்காக தான் ஆன்லைன் மூலம் வெடி பொருட்களை வாங்கியதும் தெரியவந்தது.

விசாரணைக்கு பின்னர், மாரியப்பன் மீது சரவணம்பட்டி போலீசார் 1908-வெடி பொருள் சட்ட பிரிவு 4(b) இன் (Explosive act) கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். தற்போது, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...