கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை - ஜெர்மனியுடன் இணைந்து பருவநிலை மாற்றம், பயிர் சேதம் குறித்து ஆராய்ச்சி

காலநிலைக்கு ஏற்றார்போல் பயிர் காப்பீடு செய்வது எப்படி? தண்ணீரை குறைத்து அதிக மகசூல் பெறுவது எப்படி? என்பது குறித்த ஆராய்ச்சிகள் ஜெர்மன் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படுவதாக பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தகவல்.



கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் ஜெர்மன் நாட்டுடன் இணைந்துமாறிவரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் இழப்பீடு தொடர்பாக ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.



இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது, பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிகள், பேரிடர் காலங்களில் ஏற்படும் பயிர் சேதங்களை செயற்கைகோள் தொழில்நுட்பம் மூலமாகவும், தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை திரட்டுவதன் மூலம் விவசாயிகளுக்கு உரியநிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் நோக்கம் காலநிலை மாற்றம் காரணமாக பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்வது. பயிர் பாதுகாப்பு திட்டங்கள், தனிநபர் விவசாயத்திற்கும் செயல்படுத்த ஏதுவாக அமையும். மண், தண்ணீர், பயிர் நிலை குறித்த தகவல்களை செல்பேசி வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காலநிலைக்கு ஏற்றார்போல் பயிர் காப்பீடு செய்வது எப்படி என்பதை ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளோம். இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை கையாள்வது எப்படி மற்றும் அதற்கான வழிமுறைகளை தெரிவிப்பது போன்ற திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.

தண்ணீரை குறைத்து அதிக மகசூல் பெறும் வகையில் திட்டங்களை வகுக்கப்பட உள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1000 விவசாயிகளுடன் தொடர்பில் இருந்து கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...