கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை - ஜெர்மனியுடன் இணைந்து பருவநிலை மாற்றம், பயிர் சேதம் குறித்து ஆராய்ச்சி

காலநிலைக்கு ஏற்றார்போல் பயிர் காப்பீடு செய்வது எப்படி? தண்ணீரை குறைத்து அதிக மகசூல் பெறுவது எப்படி? என்பது குறித்த ஆராய்ச்சிகள் ஜெர்மன் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படுவதாக பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தகவல்.



கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் ஜெர்மன் நாட்டுடன் இணைந்துமாறிவரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் இழப்பீடு தொடர்பாக ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.



இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது, பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிகள், பேரிடர் காலங்களில் ஏற்படும் பயிர் சேதங்களை செயற்கைகோள் தொழில்நுட்பம் மூலமாகவும், தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை திரட்டுவதன் மூலம் விவசாயிகளுக்கு உரியநிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் நோக்கம் காலநிலை மாற்றம் காரணமாக பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்வது. பயிர் பாதுகாப்பு திட்டங்கள், தனிநபர் விவசாயத்திற்கும் செயல்படுத்த ஏதுவாக அமையும். மண், தண்ணீர், பயிர் நிலை குறித்த தகவல்களை செல்பேசி வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காலநிலைக்கு ஏற்றார்போல் பயிர் காப்பீடு செய்வது எப்படி என்பதை ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளோம். இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை கையாள்வது எப்படி மற்றும் அதற்கான வழிமுறைகளை தெரிவிப்பது போன்ற திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.

தண்ணீரை குறைத்து அதிக மகசூல் பெறும் வகையில் திட்டங்களை வகுக்கப்பட உள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1000 விவசாயிகளுடன் தொடர்பில் இருந்து கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...