நீலகிரியில் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி - கூண்டு வைத்து பிடித்த வனத்துறை

மஞ்சூர் பகுதியில் இரவு நேரங்களில் உணவு தேடி வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்த நிலையில், முக்குருத்தி தேசிய பூங்கா வனப்பகுதியில் கரடியை விடப்பட்டது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் கடந்த சில மாதங்களாக கரடி ஒன்று சுற்றித்திரிந்து வந்தன. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்குள் சென்று தூங்கும் அந்த கரடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகள் மற்றும் கடைகளின் கதவு, ஜன்னல்களை உடைத்து உணவு பொருட்களை உண்டு சேதப்படுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மஞ்சூர் பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் இருந்து வந்த நிலையில், அந்த காரடியை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து,கரடியின் நடமாட்டம் இருக்க கூடிய பகுதிகளை கண்டறிந்த வனத்துறையினர், கரடியை பிடிப்பதற்காக கடந்த வாரம் கூண்டு வைத்திருந்தனர்.

அந்த கூண்டில் இன்று அதிகாலை கரடி சிக்கியதை அடுத்து கரடியை அருகில் உள்ள முக்குறுதி தேசிய பூங்கா வனப்பகுதிக்குள் கொண்டு சென்று திறந்து விட்டனர். கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...