கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகளை ஆய்வு செய்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்குமார்

கோவை - மேட்டுப்பாளையம் சாலை ஜி.என்.மில்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆய்வு செய்து, சாலை செப்பனிடும் பணிகள் குறித்து பொறியாளரிடம் கேட்டறிந்தார்.



கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் அருகே மேம்பாலம் சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.



இதனை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ், துடியலூர், பெரியநாயக்கன் பாளையம் ஆகிய இடங்களில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில் ஜி.என். மில்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, மேம்பால பணிகளையும் அங்குள்ள சாலைகளையும், பாதசாரிகள் பயன்படுத்தும் நடைமேடைகளையும் பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் சாலைகள் செப்பனிடும் பணிகள் குறித்தும் பொறியாளர்களிடம் கலந்தாலோசித்தார்.

Newsletter

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...