ஸ்போக்கன் டுட்டோரியல் என்னும் திட்டத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மும்பை ஐஐடி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்


ஐஐடி மும்பையினுடைய ஸ்போக்கன் டுட்டோரியல் என்னும் திட்டத்திற்கு கோவை பகுதியின் ஆதார மையமாக ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி செயல்படும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் கையெழுத்திடப்பட்டது.



ஐஐடி மும்பையைச் சேர்ந்த ஸ்போக்கன் டுட்டோரியல் திட்டத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம்கான் இந்த ஒப்பந்தத்தில் ஐஐடியின் சார்பாக கையெழுத்திட்டார். ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தரராமன் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் ஆசிரியர்களும், மாணவர்களும் ஓப்பன் ஸ்சோர்ஸ் மென்பொருள் பயன்படுத்துவது குறித்து ஐஐடி மும்மை பேராசிரியர்கள் பயிற்சியளிப்பார்கள்.

மேலும், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்போக்கன் டுட்டோரியல் திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி தொடர்ந்து அதுகுறித்த நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவர்.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...