கோவையில் அமைதி, நல்லிணக்கத்தை காத்திடும் வகையில் நடைபெற்ற 'அமைதிக்கான பயணம்' நிகழ்ச்சி

கோவையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பேரவையின் சார்பில் நடைபெற்ற "அமைதிக்கான பயணம்" நிகழ்ச்சியில், இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மத குருமார்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாநகரில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணிக்காக்கும் தொடர் பயணமாக கோவை அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பேரவை சார்பில் “அமைதிக்கான பயணம்” எனும் கருத்தை மையமான கொண்டு சமய நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ சோல்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தேவாலய தலைவர் சார்லஸ் வின்சென்ட், சிரவை ஆதின குமரகுருபர சுவாமிகள், ஜாமஅத்தே இஸ்லாமி ஹிந்த் உலாமா பேரவை மாநில தலைவர் ராபிதத்துல், ஜெயின் மகாசபை கோவை இணை செயலாளர் ராகேஷ் கோலேச்சா, குருத்வாரா சிங் சபா தலைவர் குர்பிரீத் சிங், பிரபஞ்ச அமைதி சேவாஷ்ரமம் நிறுவனர் சிவ ஆத்மா, புனித மைக்கேல் தேவாலய அருட்தந்தை தனசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள் பேசியதாவது, மக்களில் ஒவ்வொரு குழுவினருக்கும் தங்களது தனித்துவமான மத நம்பிக்கை, வழிபாட்டு உரிமை, பண்பாடு ஆகியவற்றை நிலை பெறச் செய்வதற்கான உரிமை இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், பிற மதத்தவரின் நம்பிக்கை, வழிபாடு, பண்பாட்டை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமையும் உண்டு.



இந்த நிலை இருந்தால்தான் அன்பும் ஒத்துழைப்பும் நிறைந்த அமைதியான சுற்றுச்சூழல் நிலைத்திருக்கும்.



மேலும், மதங்கள் கூறுகின்ற அறக்கருத்துக்கள், அன்பு, இரக்கம், கருணை, மனிதாபிமானம், உதவும் மனப்பான்மை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, போன்ற உயர்ந்த குணங்களெல்லாம் இந்நாட்டில் கடைபிடிக்க வேண்டும்.



இவ்வாறு பல்வேறு அறம் சார்ந்த கருத்துகளை மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...