கூடலூரில் வீட்டின் சுவரை இடித்து தள்ளிய காட்டு யானை - மூதாட்டி பலியான சோகம்

நீலகிரி கூடலூர் அருகே வீட்டின் சுவரை காட்டு யானை சேதப்படுத்தியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, காட்டு யானையை உடனடியாக பிடிக்க கோரி பொதுமக்கள் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவாலா, நாடு காணி, புளியம்பரை போன்ற பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. நாள்தோறும் ஊருக்குள் வரும் காட்டு யானைகள் வீடுகளை உடைத்து வீட்டில் உள்ள அரிசி போன்ற உணவு பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்றிரவு வாழவயல் பகுதியில் பாப்பாத்தி என்பவரது வீட்டின் சுவரை மக்னா யானை இடித்து தள்ளியது.



இதில் வீட்டுக்குள் உறங்கி கொண்டிருந்த மூதாட்டி பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் அவரது உறவினர்களான ராமலிங்கம்(68), சுந்தரம்பாள்(60) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். சுவர் இடிந்த சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், யானையை விரட்டிவிட்டு படுகாயமடைந்த இருவரையும் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினரை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் இறந்த பாப்பாத்தியின் உடலை எடுக்கவிடாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன் உள்ளிட்டோர் அந்த மக்னா யானை தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் உடனடியாக பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் உடலை எடுக்க அனுமதித்தனர்.

இதனிடையே வீட்டை சேதப்படுத்திய யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



யானை ஒன்று வீட்டின் சுவரை இடித்த தள்ளியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...