நீலகிரி கெத்தை மலை பாதையில் தொடரும் யானைகளின் வழிமறிப்பு - அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கெத்தை மலை பாதையில் முகாமிட்டுள்ள யானை கூட்டம் தொடர்ச்சியாக வாகனங்களை வழிமறித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சாலையில் சென்ற காரை காட்டுயானை ஆக்ரோஷமாக துரத்திய காட்சி வெளியாகி உள்ளது. இதனால் பதட்டமடைந்த வாகன ஓட்டிகள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோவைக்கு நாள்தோறும் கெத்தை மலைப்பாதை வழியாக சென்று வருகின்றனர்.இந்த மலை பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதால் அடிக்கடி காட்டு யானைகள் சாலைக்கு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அந்த மலை பாதையில் முகாமிட்டுள்ள யானை கூட்டம் வாகனங்களை வழிமறித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை அந்த சாலையில் கோவையை நோக்கி சென்ற காரை யானைகள் வழிமறித்தன. பின்னர் ஒரு யானைஆக்ரோஷமாக காரை துரத்தி வந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட கார் ஓட்டுநர் வேகமாக காரை பின்னோக்கி சிறிது தூரம் இயக்கினார். அதனையடுத்து யானை மீண்டும் திரும்பி சென்றது.



அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவர்களும் பைக்கை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். நீண்ட நேரமாக வாகனங்கள் செல்ல விடாமல் சாலையில் நின்ற யானைகள் வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது.



இதனிடையே கெத்தை மலைப்பாதையில் உலா வரும் காட்டு யானை கூட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...