நீலகிரி கெத்தை மலை பாதையில் தொடரும் யானைகளின் வழிமறிப்பு - அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கெத்தை மலை பாதையில் முகாமிட்டுள்ள யானை கூட்டம் தொடர்ச்சியாக வாகனங்களை வழிமறித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சாலையில் சென்ற காரை காட்டுயானை ஆக்ரோஷமாக துரத்திய காட்சி வெளியாகி உள்ளது. இதனால் பதட்டமடைந்த வாகன ஓட்டிகள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோவைக்கு நாள்தோறும் கெத்தை மலைப்பாதை வழியாக சென்று வருகின்றனர்.இந்த மலை பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதால் அடிக்கடி காட்டு யானைகள் சாலைக்கு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அந்த மலை பாதையில் முகாமிட்டுள்ள யானை கூட்டம் வாகனங்களை வழிமறித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை அந்த சாலையில் கோவையை நோக்கி சென்ற காரை யானைகள் வழிமறித்தன. பின்னர் ஒரு யானைஆக்ரோஷமாக காரை துரத்தி வந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட கார் ஓட்டுநர் வேகமாக காரை பின்னோக்கி சிறிது தூரம் இயக்கினார். அதனையடுத்து யானை மீண்டும் திரும்பி சென்றது.



அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவர்களும் பைக்கை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். நீண்ட நேரமாக வாகனங்கள் செல்ல விடாமல் சாலையில் நின்ற யானைகள் வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது.



இதனிடையே கெத்தை மலைப்பாதையில் உலா வரும் காட்டு யானை கூட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...