குன்னூரில் தனியார் பங்களாவிற்குள் நுழைந்து மேஜை நாற்காளிகளை சேதப்படுத்திய காட்டு மாடு- பொதுமக்கள் அச்சம்

குன்னூரில் உள்ள தனியார் பங்களாவிற்குள் ஆக்ரோஷத்துடன் நுழைந்து அங்கிருந்த மேஜை நாற்காளிகளை காட்டு மாடு சேதப்படுத்திய நிலையில், அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: குன்னூரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் யானை, கரடி போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக குன்னூர் நகரப் பகுதியில் சுற்றி வரும் காட்டு மாடுகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.



இந்நிலையில் குன்னூர் கிளப்ரோடு பகுதியில் உள்ள தனியார் பங்களாவிற்குள் நுழைந்த காட்டுமாடு அங்கு வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த டேபிள், சேர்கள், டீ ப்பாய்களை ஆக்ரோஷத்துடன் சேதப்படுத்தி விட்டு சென்றது.



வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது தங்களை அச்சுறுத்தி வரும் காட்டுமாடுகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...