மதுக்கரை அருகே புது மணப்பெண் தீக்குளித்து தற்கொலை - வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

மதுக்கரையில் திருமணமான 11 நாட்களிலே புது மணப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தற்போது வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.


கோவை: மதுக்கரை முனியப்பன் கோயில் வீதியை சேர்ந்த மனோஜ் குமார் என்பவருக்கும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மர் என்பவரது மகள் முத்துமாரி என்கிற கிறிஸ்டினா ஏஞ்சல் (25) என்பவருக்கும் கடந்த 11 நாட்களுக்கு முன்பு திருமணமானது.

திருமணம் முடிந்து முத்துமாரி மதுக்கரையில் உள்ள தனது கணவர் மனோஜ் குமார் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த முத்துமாரி திடீரென உடலில் மண்ணெண்யை ஊற்றி தீ பற்றவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த முத்துமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தற்போது வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணமான 11 நாளில் புதுமண பின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...