மதுக்கரை அருகே புது மணப்பெண் தீக்குளித்து தற்கொலை - வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

மதுக்கரையில் திருமணமான 11 நாட்களிலே புது மணப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தற்போது வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.


கோவை: மதுக்கரை முனியப்பன் கோயில் வீதியை சேர்ந்த மனோஜ் குமார் என்பவருக்கும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மர் என்பவரது மகள் முத்துமாரி என்கிற கிறிஸ்டினா ஏஞ்சல் (25) என்பவருக்கும் கடந்த 11 நாட்களுக்கு முன்பு திருமணமானது.

திருமணம் முடிந்து முத்துமாரி மதுக்கரையில் உள்ள தனது கணவர் மனோஜ் குமார் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த முத்துமாரி திடீரென உடலில் மண்ணெண்யை ஊற்றி தீ பற்றவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த முத்துமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தற்போது வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணமான 11 நாளில் புதுமண பின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...