மதுக்கரை அருகே புது மணப்பெண் தீக்குளித்து தற்கொலை - வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

மதுக்கரையில் திருமணமான 11 நாட்களிலே புது மணப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தற்போது வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.


கோவை: மதுக்கரை முனியப்பன் கோயில் வீதியை சேர்ந்த மனோஜ் குமார் என்பவருக்கும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மர் என்பவரது மகள் முத்துமாரி என்கிற கிறிஸ்டினா ஏஞ்சல் (25) என்பவருக்கும் கடந்த 11 நாட்களுக்கு முன்பு திருமணமானது.

திருமணம் முடிந்து முத்துமாரி மதுக்கரையில் உள்ள தனது கணவர் மனோஜ் குமார் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த முத்துமாரி திடீரென உடலில் மண்ணெண்யை ஊற்றி தீ பற்றவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த முத்துமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தற்போது வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணமான 11 நாளில் புதுமண பின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...