கோவை அருகே அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து - பெண் காயம்

கோவை அடுத்த வடவள்ளி பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் பெண் காயமடைந்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவையில் இருந்து வடவள்ளி நோக்கி சென்ற அரசு பேருந்து வடவள்ளி பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.



அப்போது தொண்டாமுத்தூரில் இருந்து வடவள்ளி நோக்கி வந்த கார் கட்டுபாட்டை இழந்து, அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் காரின் முன்புறம் பலத்த சேதமடைந்தது.



இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த பெண் காயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



விபத்து நடந்த பகுதியில் பொதுமக்கள் கூடியதால் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொக்லைன் மூலம் காரை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...