தொடர் மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு: வியாபாரிகள் ஏலம் எடுக்க முன்வராததால் 7 டன் தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்

கிணத்துக்கடவு சந்தையில் 10 டன் தக்காளி ஏலத்திற்கு வந்த நிலையில், 3 டன் தக்காளியை மட்டுமே வியாபாரிகள் ஏலம் எடுத்ததால், மீதமுள்ள தக்காளியை விவசாயிகள் குப்பையில் கொட்டிவிட்டு சென்றனர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது

இந்நிலையில், கடும் மழையும் பொருட்படுத்தாமல் அறுவடை செய்த தக்காளியை, விவசாயிகள் கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்வதற்காக இன்று கொண்டு வந்தனர்.



இந்த நிலையில் காய்கறி சந்தைக்கு வந்த 10 டன் நாட்டு தக்காளியில் மூன்று டன்கள் மட்டுமே வியாபாரிகள் ஏலம் எடுத்ததாகவும், மீதம் இருந்த ஏழு டன் தக்காளியை ஏலம் எடுக்க வியாபாரிகள் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.



மேலும் ஒரு கிலோ நாட்டுத் தக்காளியை வியாபாரிகள் ஆறு ரூபாய்க்கு ஏலம் எடுத்ததால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், உரிய விலை கிடைக்காததால் விற்பனை செய்யக் கொண்டு வந்த தக்காளியை சந்தையில் உள்ள குப்பையில் கொட்டிச் சென்றனர்.

இதனால் காய்கறி சந்தையில் குப்பையில் தேங்கி கிடக்கும் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள தக்காளியால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது..

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...