கோத்தகிரி அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோர மண் திட்டில் மோதி பயங்கர விபத்து - 20 பேர் படுகாயம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து குன்னூருக்கு சென்ற அரசு பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மண் திட்டில் மோதிய விபத்தில், 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து இன்று காலை குன்னூருக்கு அரசு பேருந்து ஒன்றி பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு சென்றது.



இந்நிலையில், பேருந்து கோத்தகிரியில் உள்ள கே.பி.எஸ் கல்லூரி அருகே சென்ற போது பேருந்தில் பிரேக் பிடிக்காமல் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியவாறு சாலை ஓரத்தில் உள்ள மண் திட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பைக்கில் வந்த மகேந்திரன் என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் அரசு பேருந்தில் பயணம் செய்த ஒட்டுநர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட மருத்துவர்கள் நிலையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே பேருந்தை இயக்கிய ஒட்டுநர் ரகுராதன் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த மகேந்திரன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



சம்பவம் குறித்து கோத்தகிரி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் காலாவதியான அரசு பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...