கோத்தகிரி அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோர மண் திட்டில் மோதி பயங்கர விபத்து - 20 பேர் படுகாயம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து குன்னூருக்கு சென்ற அரசு பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மண் திட்டில் மோதிய விபத்தில், 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து இன்று காலை குன்னூருக்கு அரசு பேருந்து ஒன்றி பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு சென்றது.



இந்நிலையில், பேருந்து கோத்தகிரியில் உள்ள கே.பி.எஸ் கல்லூரி அருகே சென்ற போது பேருந்தில் பிரேக் பிடிக்காமல் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியவாறு சாலை ஓரத்தில் உள்ள மண் திட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பைக்கில் வந்த மகேந்திரன் என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் அரசு பேருந்தில் பயணம் செய்த ஒட்டுநர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட மருத்துவர்கள் நிலையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே பேருந்தை இயக்கிய ஒட்டுநர் ரகுராதன் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த மகேந்திரன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



சம்பவம் குறித்து கோத்தகிரி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் காலாவதியான அரசு பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...