அண்ணா பல்கலை.கோவை மண்டல வளாகத்தில் முதலாமாண்டு பொறியியல்‌ மாணவர்களுக்கான அறிமுக விழா

மருதமலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல வளாகத்தில் நடைபெற்ற முதலாமாண்டு பொறியியல்‌ மாணவர்களுக்கான அறிமுக விழாவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தொடங்கி வைத்து அறிவுரைகளை வழங்கினார்.



கோவை: வடவள்ளி அடுத்த மருதமலை பகுதியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல வளாகத்தில் நடப்பு கல்வியாண்டில்‌, பி.டெக்‌.செயற்கை நுண்ணறிவு மற்றும்‌ தரவு அறிவியல்‌, பி.இ.கணிப்பொறி அறிவியல்‌, பி.இ.தகவல்‌ தொடர்பியல்‌, பி.இ.மின்னியல்‌ பொறியியல்‌, பி.இ.இயந்திரவியல்‌ பொறியியல்‌ ஆகிய ஐந்து இளங்கலை பொறியியல்‌ படிப்புகளுக்கான வகுப்புகள்‌ தொடங்கப்பட உள்ளன.



இந்நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மரபு சார்ந்த கல்வி முறைகளுடன்‌, மாணவர்களின்‌ தனித்திழமையை வளர்த்துக்கொள்ள வழிகாட்டும்‌ “நான்‌ முதல்வன்‌” என்னும்‌ தமிழக அரசின்‌ திட்டத்தினைக்‌ குறித்தும்‌, அதன்‌ வாயிலாக பல்லாயிரக்கணக்கான மாணவா்கள்‌ பயிற்சி பெற்று வருவதையும்‌ குறிப்பிட்டார்‌. மேலும் இனி வரும்‌ 25 ஆண்டுகள் இந்தியாவிற்கான ஆண்டுகளாக உலக அரங்கினுள்‌ அமையும்‌ என்றும் பிரதாப் நம்பிக்கை தெரிவித்தார்‌.



வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிகழ்வு நிரலில், இன்றைய தொழல்யுகத்தின் பல்வேறு பரிமாணங்களை முன்னிறுத்தி,பன்முகக்‌ கண்ணோட்டத்தில்‌ நடத்தப்படவுள்ளது.தமிழகத்தின்‌ புகழ்‌ பெற்ற பேச்சாளர்கள்‌ மற்றும்‌ வல்லுநாகள்‌,இதில் பங்கேற்று தொழில்நுட்பம்‌ முதல்‌ சூழலியல்‌ வரையிலான களங்களைப்‌ பற்றிய ஆழ்நோக்கினை மாணவர்களுக்கு வழங்க உள்ளனர்.



இந்நிகழ்ச்சியில்‌ அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல வளாகத்தின் முதன்மையர்‌ பேராசிரியர்‌ முனைவர்‌.சரவணக்குமா, தமிழ்நாடு மாநில வனவிலங்கு வாரிய உறுப்பினர்‌ ஓசை காளிதாச, கோவை ரூட்ஸ்‌ நிறுவன இயக்குநர்‌ டாக்டர்.கவிதாசன், பேராசிரியா்‌ முனைவர் மாஷல்‌ அந்தோணி, முனைவர்‌ எஸ்‌.என்‌.மகாலட்சுமி மற்றும்‌ மண்டல வளாகத்தின்‌ பேராசிரியர்கள்‌, நிர்வாக அலுவலர்கள்‌, மாணவ, மாணவிகள்‌ மற்றும்‌ பெற்றோர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...