கோவை டி.கே. வீதியில் சமையல் கேஸ் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வடமாநில தொழிலாளி காயம்

கோவை டி.கே. வீதியில் சமையல் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வடமாநில தொழிலாளி காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ச பெற்று வருகிறார்.


கோவை: மேற்குவங்க மாநிலம் கல்கத்தாவை சேர்ந்தவர் பிஜாய். இவர் கோவை தியாகி குமரன் வீதியில் வாடகை வீட்டில் தங்கி தங்க நகை தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை அவர் தங்கியிருந்த வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சமையல் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் வீட்டின் மேற்கூறை உடைந்து சேதமானது.



மேலும் இதில், பிஜாய்க்கு அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.



இதனையடுத்து காயமடைந்த பிஜாயை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்கட்ட விசாரணையில் பிஜாய் சமையல் சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருத்ததே விபத்துக்கான காரணம் என தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...