கோவை டி.கே. வீதியில் சமையல் கேஸ் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வடமாநில தொழிலாளி காயம்

கோவை டி.கே. வீதியில் சமையல் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வடமாநில தொழிலாளி காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ச பெற்று வருகிறார்.


கோவை: மேற்குவங்க மாநிலம் கல்கத்தாவை சேர்ந்தவர் பிஜாய். இவர் கோவை தியாகி குமரன் வீதியில் வாடகை வீட்டில் தங்கி தங்க நகை தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை அவர் தங்கியிருந்த வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சமையல் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் வீட்டின் மேற்கூறை உடைந்து சேதமானது.



மேலும் இதில், பிஜாய்க்கு அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.



இதனையடுத்து காயமடைந்த பிஜாயை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்கட்ட விசாரணையில் பிஜாய் சமையல் சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருத்ததே விபத்துக்கான காரணம் என தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...