கோவை மாநகரில் தொடர் கனமழையிலும் எந்த பாதிப்பும் இல்லை - பொள்ளாச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவையில் கடந்தாண்டில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் மழைநீர் தேங்காமல் தடுக்கப்பட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை முன்னிட்டு முதல்நிலை கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் அமைச்சர்கள், செந்தில் பாலாஜி, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஒரு லட்சத்து ஏழாயிரம் தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தந்துள்ளோம். வரும் 27-ம் தேதி பொள்ளாச்சியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.



தமிழ்நாட்டில் வேலை இல்லை என்ற போக்கை மாற்ற தமிழக முதல்வரால் இந்த திட்டம் நடைபெற்று வருகிறது. 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தருவோம். இந்திய அளவில் கல்வி துறையில் 51% முதன்மை மாநிலமாக உள்ளது.2800 கோடி தொழில் பயிற்சி மையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.



இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது, மழையில் பாதிப்பு வரக்கூடாது என்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கோவையில் கடந்த ஆண்டு மழைநீர் தேங்கியது.

கடந்த ஆண்டில் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்து இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பது. 32 வாய்கால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கும் பகுதி ஆய்வால் பாதிப்புகள் ஏற்படாதபடி தவிர்க்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது. ஆட்சியர் தலைமையில் செயல்பாடுகள் உள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் மழை நீர் தேங்காதபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அதிக மழையிலும் பாதிப்பு இல்லை.மோட்டார்கள் தயாராக உள்ளது. அதிக மழை பெய்தாலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்படும் இடங்களை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பார்வையிடுகின்றனர்.

தமிழகம் முழுவதும் எந்த இடங்களிலும் மின்விநியோகம் பாதிப்பு இல்லை.11,000 பேர் மின்வாரியத்தின் மூலம் சிறப்பு பணிகளை மேற்கொள்ள பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மின்வாரியம் மற்றும் குழுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் இதற்கு காரணம்.கோவையில் வரலாற்றில் இல்லாத மழை பெய்தும் பாதிப்பில்லை. கடந்த பத்தாண்டுகளில் மின் திட்டங்கள் செயல்படுத்தவில்லை.

சிறு, குறு தொழில் நடத்த இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக குறைந்த மின்கட்டணம். மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டில் எந்தவிதமான சாலையும் போடவில்லை.சிறப்பு நிதி 200 கோடியில் 26 கோடி விடுவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்திற்குள் பழுதடைந்த சாலைகள் சரி செய்யப்படும்.

கோவையில் தனியார் பள்ளிகள் மாணவர்களின் குறிப்பேட்டில் சாதியை பதிவதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்த அவர், இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு வந்த பிறகு கல்வித் துறையுடன் பேசி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...