கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது

கோவை பார்க் பொறியியல் கல்லூரியில் ”விவசாயம் சார்ந்த துறையின் மேம்படுத்தப்பட்ட செயல்முறைகள்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் NABARD நிறுவனத்தின் பேராசிரியர் S. புவனேஸ்வரி கலந்து சிறப்புரையாற்றினார்.


கோவை: பார்க் பொறியியல் கல்லூரியானது கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கணியூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி ஆகும்.

இது இந்தியாவின் ஐந்தாவது சிறந்த பல்கலைக்கழகமாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரிக்கு ஐஎஸ்ஓ 9002 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் விவசாய பொறியியல் துறையின் சார்பாக "விவசாயம் சார்ந்த துறையின் மேம்படுத்தப்பட்ட செயல்முறைகள்" என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை 10 Nov 2022 அன்று கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு நடைபெற்றது.

இப்பயிற்சி பட்டறைக்கு வருகை தந்திருந்த அனைவரையும் கல்லூரியின் முதல்வர் Dr. லக்ஷ்மணன் வரவேற்றார்.

மாணவர்கள் இது போன்ற பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி தெரிவித்தார்.



இந்த பயிற்சி பட்டறையின் ஒரு பகுதியாக "தொழில் முனைவு மற்றும் விவசாய மருத்துவம்" என்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக Megha Group of Business நிறுவனர் S. புவனேஸ்வரி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் NABARD நிறுவனத்தின் வருகை பேராசிரியர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வேளாண் துறையின் புதிய முயற்சிகள் மற்றும் வளர்ச்சிகள் பற்றி எடுத்துரைத்தார்.

மதிய வேளையில் கருத்தரங்கில் பேசிய சிறப்பு விருந்தினர் செல்வகுமார், நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர், Greeno Tech Solutions, கோவை இந்த துறைசார்ந்த ஆராய்ச்சி வளர்ச்சி மற்றும் வாய்ப்புக்கான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.



இந்த கருத்தரங்கில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

இறுதியாக தேசிய கீதத்துடன் கருத்தரங்கு நிறைவு பெற்றது.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...