கோவையில் இருந்து கேரளா செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தற்காலிக அனுமதி நிறுத்திவைப்பு

கோவையில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களுக்கு தற்காலிக அனுமதி கிடைக்காததால் சுற்றுலா பயணிகளுடன் எல்லையில் நீண்ட நேரம் காத்திருந்து 100க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் திரும்பியுள்ளன இதானால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


கோவை: தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு எல்லைகளில் உள்ள போக்குவரத்துறை சோதனை சாவடிகளில் தற்காலிக அனுமதி வழங்குவது வழக்கம்.

இதற்காக வாகன எண்கள் பதிவு செய்யப்பட்டு அதற்கான கட்டணமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது இணையதளம் மூலம் இந்த அனுமதிக்கு விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தற்காலிக அனுமதி அளிப்பது கடந்த இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்டுவிட்டது.

இதனால் கோவை வழியாக கேரளா செல்ல வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தும் அனுமதி கிடைக்காமல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு நேரடியாகவே கே.ஜி.சாவடி பகுதியில் உள்ள சோதனைச் சாவடிக்கு வந்து தற்காலிக அனுமதி விண்ணப்பித்தால் கிடைப்பதில்லை என அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் மீண்டும் சுற்றுலா வாகனங்கள் கோவைக்கு திரும்புகின்றனர்.

நேற்று இரவு வரை சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் திரும்பிய நிலையில், இன்று சென்ற வாகனங்களுக்கும் தற்காலிக அனுமதி கிடைக்காததால் சுற்றுலா பயணிகளுடன் கோவை - கேரளா எல்லையில் நீண்ட நேரம் காத்திருந்து திரும்ப கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.



வாடகை எடுத்தும் ஓட்ட முடியாமல் கூடுதலாக வாகன ஓட்டிகளும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



இதனால் மீண்டும் சோதனைச் சாவடிகளிலேயே அனுமதி வழங்க வேண்டும் அல்லது இணையதளம் விண்ணப்பித்தால் தற்காலி அனுமதி தாமதமின்றி வழங்க வேண்டும் என வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...