கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் அடிக்கடி உலா வரும் கரடிகள் - சிசிடிவி காட்சிகளால் பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரி அரவேணு பெரியார் நகர் பகுதியில் அடிக்கடி கரடிகள் உலா வருவதால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் உடனடியாக கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவிலான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்நிலையில் சமீப காலமாக இந்த தேயிலை தோட்டங்கள் வழியாக கரடிகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி ஊருக்குள் உலா வரும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகின்றன.



குறிப்பாக கோத்தகிரியில் இருந்து அரவேணு செல்லக்கூடிய பெரியார் நகர் பகுதியில் தொடர்ந்து சிறுத்தைகள் மற்றும் கரடிகள் நடமாட்டம் நாள்தோறும் இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவேணு பெரியார் நகரில் உள்ள வீட்டுக்குள் இரண்டு கரடிகள் புகுந்து உலா வந்து சண்டையிட்டன. கரடிகள் சண்டையிட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.



இதனிடையே நேற்று மீண்டும் இரண்டு கரடிகள் குடியிருப்பு பகுதியில் உலா வந்தன. இந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் கரடிகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...