கோவையில் அரசு கேபிள் டிவி பணிகள் குறித்து மேம்பாட்டு ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

கோவையில் அரசு கேபிள் டிவி பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுடன் 'நாளைய திரன்' நிகழ்ச்சியை, தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலர் நீரஜ் மிட்டல் ஐஏஎஸ் நடத்தி சிறப்பித்தார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அரசு கேபிள் டிவி பணிகள் குறித்து மேம்பாட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வானது தகவல் தொழில்நுட்ப அரசு முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல் தலைமையில் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்ட அரசு கேபிள் டிவி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் அரசு கேபிள் டிவி யின் தற்போதைய நிலைமை, இதனை மேம்படுத்த செய்ய வேண்டிய செயல்கள், ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதுமையான சோதனைக் கற்றலை வெளிப்படுத்தும் நோக்கில், பல்வேறு கல்லூரி மாணவர்களுடன் 'நாளைய திரன்' நிகழ்ச்சியை, தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலர் நீரஜ் மிட்டல் ஐஏஎஸ் நடத்தினார்.



இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பயிற்சி உதவி ஆட்சியர் செளமியா ஆனந்த், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...