கோவையில் அரசு கேபிள் டிவி பணிகள் குறித்து மேம்பாட்டு ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

கோவையில் அரசு கேபிள் டிவி பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுடன் 'நாளைய திரன்' நிகழ்ச்சியை, தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலர் நீரஜ் மிட்டல் ஐஏஎஸ் நடத்தி சிறப்பித்தார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அரசு கேபிள் டிவி பணிகள் குறித்து மேம்பாட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வானது தகவல் தொழில்நுட்ப அரசு முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல் தலைமையில் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்ட அரசு கேபிள் டிவி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் அரசு கேபிள் டிவி யின் தற்போதைய நிலைமை, இதனை மேம்படுத்த செய்ய வேண்டிய செயல்கள், ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதுமையான சோதனைக் கற்றலை வெளிப்படுத்தும் நோக்கில், பல்வேறு கல்லூரி மாணவர்களுடன் 'நாளைய திரன்' நிகழ்ச்சியை, தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலர் நீரஜ் மிட்டல் ஐஏஎஸ் நடத்தினார்.



இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பயிற்சி உதவி ஆட்சியர் செளமியா ஆனந்த், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...