கோவையில் அரசு கேபிள் டிவி பணிகள் குறித்து மேம்பாட்டு ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

கோவையில் அரசு கேபிள் டிவி பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுடன் 'நாளைய திரன்' நிகழ்ச்சியை, தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலர் நீரஜ் மிட்டல் ஐஏஎஸ் நடத்தி சிறப்பித்தார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அரசு கேபிள் டிவி பணிகள் குறித்து மேம்பாட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வானது தகவல் தொழில்நுட்ப அரசு முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல் தலைமையில் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்ட அரசு கேபிள் டிவி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் அரசு கேபிள் டிவி யின் தற்போதைய நிலைமை, இதனை மேம்படுத்த செய்ய வேண்டிய செயல்கள், ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதுமையான சோதனைக் கற்றலை வெளிப்படுத்தும் நோக்கில், பல்வேறு கல்லூரி மாணவர்களுடன் 'நாளைய திரன்' நிகழ்ச்சியை, தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலர் நீரஜ் மிட்டல் ஐஏஎஸ் நடத்தினார்.



இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பயிற்சி உதவி ஆட்சியர் செளமியா ஆனந்த், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...