கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் திடீர் ஆய்வு

பள்ளியின் கட்டிடம், பள்ளி வளாகத்தின் தூய்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சமீரன், பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.



கோவை: கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அண்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன், பள்ளியின் கட்டிடம், பள்ளி வளாகத்தின் தூய்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். மேலும் பள்ளியின் கழிப்பறையையும் ஆய்வு செய்தார்.



இதனை தொடர்ந்து அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளிடம் கலந்துரையாடி மகிழ்ந்தார். அங்கு குழந்தைகளுக்கு எவ்வாறு எளிய முறையில் கல்வி கற்றுத்தரப்படுகிறது எனவும் பார்வையிட்டார்.



மேலும் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்தும் ஆசிரியர்களிடம் மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டறிந்தார்.

Newsletter

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...