தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

2022- 23 கல்வியாண்டிற்கான பொது தேர்வு அட்டவணைகளை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.


சென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ஆம்வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.

அதன்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும் என்றும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும் என்றும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறவுள்ளது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வுவைப் பொறுத்து வரையில், எம்பிபிஎஸ், பொறியியல் போன்ற உயர்க்கல்வி சேர்க்கைக்கு தேவையான மிக முக்கிய பாடங்களுக்கு போதிய கால இடைவெளி கொடுத்து அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோல, 10ம் வகுப்பு அட்டவணையில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாட தேர்வுகளுக்கு போதிய கால இடைவெளி வழங்கப்பட்டுள்ளன.

நடப்பு கல்வி ஆண்டில் தமிழகத்தில்0 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சம் பேர்1,11ஆம் வகுப்பு தேர்வை சுமார் 8.50 லட்சம் பேர் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...