கைக்கோளபாளையம் அருகே புதிதாக அமையவுள்ள டாஸ்மாக் மதுபான கடையால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு.
கோவை: கோவை மாவட்டம் காளப்பட்டி அடுத்த கைக்கோளபாளையம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் புதிதாக மதுபான கடையைஅமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் பேசியதாவது, பச்சாபாளையத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபான கடையை கைக்கோளப்பாளையம் சாலைக்கு மாற்றம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த மதுபான கடையானது கைக்கோளபாளையம் கிராம குடியிருப்பு பகுதிக்கு அருகில் அமைக்கப்பட உள்ளது. இந்த மதுபான கடையை கடந்து தான் மாணவ, மாணவிகள் காளப்பட்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டும்.

வேலைக்கு செல்லும் பெண்களும் இந்த சாலையிலேயே நடந்து சென்று வருகின்றனர். அவ்வழியில் மதுபான கடை அமையும்பட்சத்தில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இருக்காது.
மேலும் இந்த மதுபான கடையின் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கும் அங்கு செயல்படும் தொழிற்சாலைகளுக்கும் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் சூழல் உருவாகக்கூடும்.
எனவே அப்பகுதியில் அமையவுள்ள மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றிட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


இந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் பேசியதாவது, பச்சாபாளையத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபான கடையை கைக்கோளப்பாளையம் சாலைக்கு மாற்றம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த மதுபான கடையானது கைக்கோளபாளையம் கிராம குடியிருப்பு பகுதிக்கு அருகில் அமைக்கப்பட உள்ளது. இந்த மதுபான கடையை கடந்து தான் மாணவ, மாணவிகள் காளப்பட்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டும்.
வேலைக்கு செல்லும் பெண்களும் இந்த சாலையிலேயே நடந்து சென்று வருகின்றனர். அவ்வழியில் மதுபான கடை அமையும்பட்சத்தில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இருக்காது.
மேலும் இந்த மதுபான கடையின் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கும் அங்கு செயல்படும் தொழிற்சாலைகளுக்கும் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் சூழல் உருவாகக்கூடும்.
எனவே அப்பகுதியில் அமையவுள்ள மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றிட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.