கோவையில் புதிதாக அமையவுள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

கைக்கோளபாளையம் அருகே புதிதாக அமையவுள்ள டாஸ்மாக் மதுபான கடையால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு.


கோவை: கோவை மாவட்டம் காளப்பட்டி அடுத்த கைக்கோளபாளையம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் புதிதாக மதுபான கடையைஅமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



இது குறித்து அப்பகுதி மக்கள் பேசியதாவது, பச்சாபாளையத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபான கடையை கைக்கோளப்பாளையம் சாலைக்கு மாற்றம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மதுபான கடையானது கைக்கோளபாளையம் கிராம குடியிருப்பு பகுதிக்கு அருகில் அமைக்கப்பட உள்ளது. இந்த மதுபான கடையை கடந்து தான் மாணவ, மாணவிகள் காளப்பட்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டும்.



வேலைக்கு செல்லும் பெண்களும் இந்த சாலையிலேயே நடந்து சென்று வருகின்றனர். அவ்வழியில் மதுபான கடை அமையும்பட்சத்தில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இருக்காது.

மேலும் இந்த மதுபான கடையின் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கும் அங்கு செயல்படும் தொழிற்சாலைகளுக்கும் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் சூழல் உருவாகக்கூடும்.

எனவே அப்பகுதியில் அமையவுள்ள மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றிட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...