திமுக சார்பில் குன்னூர் வி.பி.தெருவில் இந்தி திணிப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

குன்னூர் வி.பி.தெருவில் இந்தி திணிப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் "எதிர்கால சந்ததிக்கு திமுக வின் தியாக வரலாற்றை கற்றுக்கொடுக்க வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் இந்தி திணிப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் குன்னூர் வி.பி.தெருவில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்புரையாற்றினார்.



திமுக வின் பொதுச்செயலார் துரைமுருகன் பேசியதாவது:-

உலகத்திலேயே ஐம்பது ஆண்டு காலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்த வரலாறு எவருக்கும் கிடையாது. ஆனால் ஒரு கட்சியில் ஐம்பது ஆண்டுகாலம் தலைவராக இருந்தவர் திமுக மறைந்த தலைவர் கலைஞர் மட்டும் தான்,



அப்படிபட்ட மகத்தான ஜாம்பவானாக திகழ்ந்த கலைஞர் மிசாவில் இருந்து இக்காட்சியை காப்பாற்றியதுடன், பதிமூன்று ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத திமுக வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்.

இன்னொரு முறை தமிழ்நாட்டில் திமுக போன்ற ஒரு கட்சி உருவாக முடியாது வரும் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டு ஆளுமையில் திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே இருக்கும்.

மேலும் மற்ற கட்சிகள் தமிழ்நாட்டில் பெயரளவில் மட்டுமே செயல்படும். இத்தகைய வரலாற்று மிக்க திமுகாவை பாதுகாக்க வேண்டும் என்றால் இக்கட்சியின் கொள்கைகள் அழியாமல் பாதுகாத்திட வேண்டும்.

ஆகையால் இளம் சமுதாயம் மத்தியில் திமுக வின் வரலாற்றை கற்று கொடுக்க வேண்டும். யார் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தாலும் இந்தியை திணிப்பது அதிக ஆர்வம் காட்டுகிறது.

குறிப்பாக பாஜக அரசு இந்தியை திணிப்பதில் காட்டெருமை போன்று யாரையும் எதையும் பொருட்படுத்தாமல் அதன் போக்கில் செல்வது போல் சென்று கொண்டிருக்கிறது இவர்களை வளரவிட்டால் பேராபத்து காத்து இருக்கிறது என எச்சரிக்கை விடுத்தார்.

இவ்வாறு துரைமுருகன் பேசினார்.



இந்நிகழ்ச்சியில் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...