மழை பாதிப்புகளை எதிர்கொள்ள திருப்பூர் மாநகராட்சி தயார் - திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்

மழை பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், மழை நீரை அகற்ற கருவிகள் தயார் நிலையில் உள்ளதாக மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது மண்டலம், அண்ணா நகர் பகுதியில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் இன்று துவக்கி வைத்தார்.



இதனையடுத்து அப்பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். மேலும், மழை பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, திருப்பூர் மாநகராட்சி சார்பில் மழை பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகராட்சி மண்டலங்கள் வாரியாக அனைத்து வார்டுகளிலும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது, அது மட்டுமின்றி மழை பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், மழைநீர் தேங்கும் இடங்களில் மின் மோட்டார் கொண்டு தண்ணீரை அப்புறப்படுத்தும் கருவிகள் தயார் நிலையில் உள்ளன.

எனவே எங்கு மழை பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக அதனை சரி செய்யும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்கவும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்லும்போது அவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் தனியார் மருத்துவமனை நிர்வாகம், திருப்பூர் மாநகராட்சிக்கு உடனடியாக அந்த தகவலை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...