கோவையில் அலைக்கழிக்கும் அம்மா வீடு திட்டம் - 5 ஆண்டுகாளாகியும் பயனில்லை விவசாய கூலி புலம்பல்

கோவை பூளுவப்பட்டியில் அம்மா வீடு திட்டத்தில் கட்டிய வீட்டிற்கான மானியத்தை பெற 50க்கும் மேற்பட்ட முறை அரசு அலுவலகத்திற்கு சென்று அல்லாடி வரும் விவசாய கூலிகள்.


கோவை: கோவை பூளுவப்பட்டி, கிளியகவுண்டன் பாளையம், லட்சுமிநாராயணசாமி கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னசாமி காட்டு வேலை செய்து வருகிறார்.

இவரது மகன் சரவணக்குமார் (40). இவரும் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் விவசாய கூலியாக வேலை செய்து வருகிறார்.

கடந்த 2017 ல் (அம்மா வீடு) அனைவருக்கு வீடு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பித்து, வீடு கட்டும் பணியை துவங்கியுள்ளனர்.

பணி நடைபெற்று வந்த நிலையில் மிக தாமதமாக 3 தவணைகளில் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சரவணகுமார் தெரிவித்ததாவது:-



வீடு முழுமையாக கட்டி முடித்த நிலையில், நிலுவையில் உள்ள இறுதி மானியம் ரூ.60 ஆயிரத்தை கடந்த 3.5 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காமல் அலைக்கழிப்பதாக சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

இது வரை பேரூராட்சி அலுவலகத்திற்கு 50க்கும் மேற்பட்ட முறையும், ஆட்சியர் அலுவலகத்திற்கு சுமார் 10 முறையும் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வீடு கட்ட ரூ.6 லட்சம் வரை ஆகியுள்ளதாகவும், இதற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கி கூலி வேலை செய்து கடனை அடைத்து வரும் நிலையில், அம்மா வீடு திட்டத்தில் வழங்கப்படுதாக கூறிய 2.10 லட்சம் மானியத்தில் இறுதி கட்ட தொகையை நிலுவையிலேயே வைத்துள்ளனர்.

மேலும் இந்த மானிய தொகையை கேட்க ஒவ்வொரு முறையும் செல்லும் புதிய அதிகாரிகள் வருவது, அதிகாரிகள் இல்லாமல் இருப்பது என வீண் அலைச்சலும் ஏற்படுகிறது.

இதற்காகவே உழைத்து சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்து வருவாதாக தெரிவித்தார். அதிகாரிகள் கடந்த 3.5 ஆண்டுகளாக மானியத்தை வழங்காமல் அலைகழித்து வரும் நிலையில் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் இதே போல அப்பகுதியில் சுமார் 7 பேருக்கு இதே நிலை நீடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...