கோவை வால்பாறை அருகே மாரியம்மன் கோவிலை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள் - அச்சத்தில் மக்கள்..!

வால்பாறை அடுத்த அக்காமலை எஸ்டேட்டில் உள்ள மாரியம்மன் கோவில் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து உள்ளே சென்று, பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகேயுள்ள அக்காமலை எஸ்டேட்டுக்கு உட்பட்ட 21.பாடி பகுதியில் நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் சுற்றித் திரிந்துள்ளன.



இதனிடையே அங்குள்ள மாரியம்மன் கோவிலில் இருந்த இரும்பு கேட், ஜன்னல் கதவு போன்றவற்றை உடைத்துள்ளன.



மேலும் உள்ளே சென்ற யானைகள் அங்கிருந்த பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளன. இதனை கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு யானைகளை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு விரட்டினர்.

இந்நிலையில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...