கோவையில் நடக்கவிருந்த பெரும் சிலிண்டர் விபத்தை தடுத்த தம்பதியினர் - குவியும் பாராட்டுகள்

பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வீட்டில் ஏற்பட்ட சிலிண்டர் கசிவை துரிதமாக செயல்பட்டு கை கால்களில் தீக்காயங்களுடன் சுற்றுவட்டார பகுதிகளை நடக்கவிருந்த பெரும் விபத்தை தடுத்த தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.


கோவை: பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு பகுதியில் உள்ள சுப்பையா. அவரது மனைவி அடைக்கலம் தள்ளுவண்டி கடை நடத்தி வருகின்றனர்.

நாள்தோறும் சாப்பாடு தயார் செய்து அதனை தள்ளு வண்டியில் விற்பனை செய்து கொண்டு வருகிறார்.



அதேபோல் இன்றும் வீட்டில் சாப்பாடு செய்வதற்காக கேஸ் அடுப்பை பயன்படுத்தும் பொழுது கேஸ் அடுப்புக்கும் சிலிண்டருக்கும் இடையில் உள்ள பைப் கனெக்சன் உருகி எரிவாயு கசிந்து தீ பிடித்துள்ளது.



அடுப்பின் அருகில் இருந்த சுப்பையா மற்றும் மனைவி அடைக்கலம் உடனடியாக சிலிண்டர் மேல் தண்ணீர் நிரப்பிய சாக்கை வைத்து சிலிண்டர் மேலும் கசியாமல் இருக்க மூடி உள்ளனர்.

இதனால் பெரும் சிலிண்டர் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. நெருப்பை அணைக்கும் பொழுது மனைவி அடைக்கலம் என்பவருக்கு கையிலும் காலிலும் நெருப்பு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

உடனே விபத்து குறித்து தீயணைப்புத் துறையில் இருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சப்ளை செய்யும் அலுவலகத்திற்கும் தெரிவித்துள்ளனர்.

சிலிண்டர் கசிவை துரிதமாக செயல்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்று தம்பதிகளுக்கு அந்த பகுதி முழுக்க பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...