காவல்துறை அமைச்சு பணியாளர் சங்க தேர்தல் - கோவையில் விறுவிறு வாக்குப்பதிவு

தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், கோவையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழ்நாடு காவல்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் அலுவலகங்களிலும் இன்று நடைபெற்று வருகிறது.



இந்த தேர்தலில் கோவையில் உள்ள கோவை மாநகர காவல் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், கோவை சரக அலுவலகம், மேற்கு மண்டல அலுவலகம், காவலர் பயிற்சி பள்ளி மற்றும் கோவைபுதூர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காம் அணி உள்ளிட்ட அலுவலகங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.



இந்த தேர்தலில் கோவை மாநகர காவல் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் அருள், மாநில துணைத்தலைவர் (மாவட்டம்) பொறுப்பிற்கு போட்டியிடுகிறார்.

கோவையில் உள்ள அனைத்து காவல் அலுவலகங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் (5.11.2022) சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...