35 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்று வரும் கோவை கருப்பராயன் கோயில் திருவிழா

கோவையில் உள்ள பிரசித்திபெற்ற கருப்பராயன் கோயில் திருவிழா 35 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் மருதமலை சாலையில் உள்ள லிங்கே கவுண்டன் புதூர் பகுதியில் கருப்பராய சுவாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோயிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 18ஆம் தேதி பூச்சாட்டுடன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. நேற்று வெள்ளிங்கிரி மலையில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் லிங்கே கவுண்டர் புதூர் மாரியம்மன் கோவிலில் இருந்து மங்கல இசை நிகழ்ச்சியுடன் கருப்பராய சுவாமி குதிரை வாகனத்தில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டார். அதனைதொடர்ந்து பக்தர்கள் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டனர். இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனைதொடர்ந்து மாலை 4 மணிக்கு மாரியம்மன் கோயிலிருந்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதனையடுத்து இரவு 7 மணிக்கு கருப்பராயசுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை கருப்பராயசுவாமிக்கு 50-க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டி படையலிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...