35 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்று வரும் கோவை கருப்பராயன் கோயில் திருவிழா

கோவையில் உள்ள பிரசித்திபெற்ற கருப்பராயன் கோயில் திருவிழா 35 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் மருதமலை சாலையில் உள்ள லிங்கே கவுண்டன் புதூர் பகுதியில் கருப்பராய சுவாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோயிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 18ஆம் தேதி பூச்சாட்டுடன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. நேற்று வெள்ளிங்கிரி மலையில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் லிங்கே கவுண்டர் புதூர் மாரியம்மன் கோவிலில் இருந்து மங்கல இசை நிகழ்ச்சியுடன் கருப்பராய சுவாமி குதிரை வாகனத்தில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டார். அதனைதொடர்ந்து பக்தர்கள் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டனர். இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனைதொடர்ந்து மாலை 4 மணிக்கு மாரியம்மன் கோயிலிருந்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதனையடுத்து இரவு 7 மணிக்கு கருப்பராயசுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை கருப்பராயசுவாமிக்கு 50-க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டி படையலிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...