வட புதூர் ஊராட்சி பாரதி நகரில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது

கிணத்துக்கடவு வட புதூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூய்மை காவலர்களை பாராட்டி நற்சான்றிதழும், சால்வையும் அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள வட புதூர் ஊராட்சியில் பாரதி நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வடபுதூர் ஊராட்சி சார்பில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



பாரதி நகரில் நடைபெற்ற இக்கூட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா அசோக்குமார் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் கண்ணம்மாள் அம்மையப்பன் முன்னிலை வகித்தார்.



இந்நிகழ்வில் வடபுதூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களை பாராட்டி நற்சான்றிதழும், சால்வையும் அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது.



இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி எழுத்தாளர் முருகானந்தன் நன்றி கூறினார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...