நீலகிரியில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி தொடக்கம் - 3 கட்டங்களா நடைபெற்ற பயிற்சி

நீலகிரியில் கடந்த 30ஆம் தேதி தேசிய படை மாணவிகளுக்கான மலையேற்ற பயிற்சி தொடங்கிய நிலையில், 3 கட்ட மலையேற்ற பயிற்சிக்கு பின் பழங்குடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது.



பயிற்சியின் முதல் கட்டமாக4 கிலோமீட்டர் தொலைவிலான அவா மலை முதல் சிம்ஸ்பூங்கா வரையில் மலையேற்ற பயிற்சி வழங்கப்பட்டது.

இரண்டாம் நிலை பயிற்சியாக 8 கிலோமீட்டர் தொலைவு என்ற அடிப்படையில் சேலாஸில் இருந்து பக்காசுரன் மலை, உபதலையிலிருந்து கேந்தரை கிராமம் வழியாக பழத்தோட்டம் வந்தடையும் வகையிலான பயிற்சி வழங்கப்பட்டது.



இதனை தொடர்ந்து மூன்றாம் கட்டமாக முத்தொரை பாலாடாவிலிருந்து முத்துனாடு மந்து வரையிலான மலையேற்ற பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இறுதியாக தேசிய படை மாணவிகள் பழங்குடி கிராமம் மற்றும் பழங்குடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். மேலும் பழங்குடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி, வாழ்வியல் மதிப்பீடுகள் குறித்துவிழிப்புணர்வு வழங்கப்பட்டது.



இந்த பயிற்சியின் மூலம் பன்முக கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்ததாக பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகள் தெரிவித்தனர்.



Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...