நீலகிரியில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி தொடக்கம் - 3 கட்டங்களா நடைபெற்ற பயிற்சி

நீலகிரியில் கடந்த 30ஆம் தேதி தேசிய படை மாணவிகளுக்கான மலையேற்ற பயிற்சி தொடங்கிய நிலையில், 3 கட்ட மலையேற்ற பயிற்சிக்கு பின் பழங்குடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது.



பயிற்சியின் முதல் கட்டமாக4 கிலோமீட்டர் தொலைவிலான அவா மலை முதல் சிம்ஸ்பூங்கா வரையில் மலையேற்ற பயிற்சி வழங்கப்பட்டது.

இரண்டாம் நிலை பயிற்சியாக 8 கிலோமீட்டர் தொலைவு என்ற அடிப்படையில் சேலாஸில் இருந்து பக்காசுரன் மலை, உபதலையிலிருந்து கேந்தரை கிராமம் வழியாக பழத்தோட்டம் வந்தடையும் வகையிலான பயிற்சி வழங்கப்பட்டது.



இதனை தொடர்ந்து மூன்றாம் கட்டமாக முத்தொரை பாலாடாவிலிருந்து முத்துனாடு மந்து வரையிலான மலையேற்ற பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இறுதியாக தேசிய படை மாணவிகள் பழங்குடி கிராமம் மற்றும் பழங்குடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். மேலும் பழங்குடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி, வாழ்வியல் மதிப்பீடுகள் குறித்துவிழிப்புணர்வு வழங்கப்பட்டது.



இந்த பயிற்சியின் மூலம் பன்முக கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்ததாக பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகள் தெரிவித்தனர்.



Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...