வார்டு எண் 43: கோவை வேலாண்டிபாளையம் அருகே சிதிலமடைந்துள்ள அங்கன்வாடி மையம் - புதிதாக கட்டித்தரக்கோரி கவுன்சிலர் மல்லிகா ஆட்சியரிடம் மனு

கோவை வேலாண்டிபாளையம் அருகே 1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் சிதிலமடைந்துள்ள நிலையில் கட்டிடங்களை புதிதாக கட்டித்தர வலியுறுத்தி, 43வது வார்டு உறுப்பினர் மல்லிகா புருஷோத்தமன் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 43 வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் மல்லிகா புருஷோத்தமன். இவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அவர் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கோவை மாநகராட்சி 43 வது வார்டு தெலுங்கு பாளையம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட வேலாண்டிபாளையம் ஜவஹர்புரம் பகுதியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் வீதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது.

கடந்த 1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி மையத்தின் கட்டிடம் தற்போது மேற்கூரை ஓடுகள் உடைந்து, கட்டிடம் சிதலமடைந்து உள்ளது. எனவே அதனை புதிதாக கட்டித் தர வேண்டும்.

மேலும், வெங்கடாபுரம் வெங்கடசாமி வீதியில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் சத்துணவு கூடத்தையும் புதிதாக கட்டித் தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...