கோவை வேலாண்டிபாளையம் அருகே 1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் சிதிலமடைந்துள்ள நிலையில் கட்டிடங்களை புதிதாக கட்டித்தர வலியுறுத்தி, 43வது வார்டு உறுப்பினர் மல்லிகா புருஷோத்தமன் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தார்.
கோவை: கோவை மாநகராட்சியின் 43 வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் மல்லிகா புருஷோத்தமன். இவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அவர் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கோவை மாநகராட்சி 43 வது வார்டு தெலுங்கு பாளையம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட வேலாண்டிபாளையம் ஜவஹர்புரம் பகுதியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் வீதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது.
கடந்த 1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி மையத்தின் கட்டிடம் தற்போது மேற்கூரை ஓடுகள் உடைந்து, கட்டிடம் சிதலமடைந்து உள்ளது. எனவே அதனை புதிதாக கட்டித் தர வேண்டும்.
மேலும், வெங்கடாபுரம் வெங்கடசாமி வீதியில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் சத்துணவு கூடத்தையும் புதிதாக கட்டித் தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கோவை மாநகராட்சி 43 வது வார்டு தெலுங்கு பாளையம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட வேலாண்டிபாளையம் ஜவஹர்புரம் பகுதியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் வீதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது.
கடந்த 1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி மையத்தின் கட்டிடம் தற்போது மேற்கூரை ஓடுகள் உடைந்து, கட்டிடம் சிதலமடைந்து உள்ளது. எனவே அதனை புதிதாக கட்டித் தர வேண்டும்.
மேலும், வெங்கடாபுரம் வெங்கடசாமி வீதியில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் சத்துணவு கூடத்தையும் புதிதாக கட்டித் தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.