வார்டு எண் 43: கோவை வேலாண்டிபாளையம் அருகே சிதிலமடைந்துள்ள அங்கன்வாடி மையம் - புதிதாக கட்டித்தரக்கோரி கவுன்சிலர் மல்லிகா ஆட்சியரிடம் மனு

கோவை வேலாண்டிபாளையம் அருகே 1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் சிதிலமடைந்துள்ள நிலையில் கட்டிடங்களை புதிதாக கட்டித்தர வலியுறுத்தி, 43வது வார்டு உறுப்பினர் மல்லிகா புருஷோத்தமன் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 43 வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் மல்லிகா புருஷோத்தமன். இவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அவர் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கோவை மாநகராட்சி 43 வது வார்டு தெலுங்கு பாளையம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட வேலாண்டிபாளையம் ஜவஹர்புரம் பகுதியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் வீதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது.

கடந்த 1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி மையத்தின் கட்டிடம் தற்போது மேற்கூரை ஓடுகள் உடைந்து, கட்டிடம் சிதலமடைந்து உள்ளது. எனவே அதனை புதிதாக கட்டித் தர வேண்டும்.

மேலும், வெங்கடாபுரம் வெங்கடசாமி வீதியில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் சத்துணவு கூடத்தையும் புதிதாக கட்டித் தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...