நீலகிரி அருகே குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் 6 காட்டுயானைகள் முகாம் - வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 6 காட்டு யானைகள் குன்னூர் - மேட்டுபாளையம் செல்லும் சாலையின் 13வது கொண்டை ஊசி வளைவு அருகே முகாமிட்டுள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.



நீலகிரி: நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் வெளியேறி சாலைகளில் சுற்றித்திரியும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. மேலும் அவ்வப்போது, வாகனங்களை தாக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 13 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 6 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த யானைகள் சாலையோரம் உள்ள அடர்ந்த சோலைகளில் உள்ள பழங்களையம், தாவரங்களையும், மூங்கில்களையும் உண்டு வருகின்றன, இவை குன்னூர் மேட்டுப்பாளையம் சாலைக்கு வந்து விடாமல் வனத்துறையினர் தாெடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இருப்பினும் இந்த யானைகள் எந்த நேரத்திலும் சோலைப் பகுதியில் இருந்து வெளியேறி சாலைக்கு வரும் சூழல் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



மேலும் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினரும் யானைகளையும் வாகன போக்குவரத்தையும் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...