திருப்பூரில் பலகார சீட்டு நடத்தி ரூ.2.90 கோடி மோசடி - தலைமறைவான குற்றவாளியை பிடித்து பணத்தை மீட்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் மனு

திருப்பூர் மாவட்டம் செரங்காடு அருகே பலகார சீட்டு நடத்தி ரூ.2.90 கோடியை மோசடி செய்துவிட்டு தலைமறைவான குமார் என்பவரை கைது செய்து பணத்தை மீட்டு தர வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் செரங்காடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக தங்கி மளிகை கடை நடத்தி வந்தவர் வசந்தகுமார். இவர் மளிகை கடை மட்டுமல்லாமல், பொதுமக்களிடம் மாத மற்றும் வார தவணை அடிப்படையில் பலகார சீட்டு நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் வசந்தகுமார் மீது ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஆண்டு 200-க்கும் மேற்பட்டோர் வார மற்றும் மாத தவணையில் பலகார சீட்டில் சேர்ந்துள்ளனர் . வாரம் தோறும் 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை தவணைத் தொகையாக செலுத்தி வந்துள்ளனர்.

இதனிடையே கடந்த தீபாவளி பண்டிகைக்கு தர வேண்டிய பணத்தை, வியாழக்கிழமை தருவதாக குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் புதன்கிழமையுடன் குடும்பத்தோடு வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.



மேலும் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தங்கள் பணத்தை மீட்டு தர வலியுறுத்தி மனு அளித்துள்ளனர் .

ஆனால் ஒரு வார காலமாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாங்கள் கட்டிய பணத்தை மீட்டு தர வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிலையில் குமாரிடம் 200க்கும் மேற்பட்டோர் சுமார் 2 கோடியே 90 லட்சம் ரூபாய் வரை சீட்டுக்காக பணம் செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...