கோவை கார் வெடி விபத்து வழக்கு: சம்பவ இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு; அப்பகுதி மக்களிடம் விசாரணை.

வழக்கு எண்.ஐ. ஏ வுக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று முதல் புலன் விசாரணையை என்.ஐ. ஏ அதிகாரிகள் துவக்கியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் என்.ஐ. ஏ அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.


கோவை: கோவை உக்கடம் கோட்டைமேடு அருகே உள்ள கோட்ட ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ஆம் தேதி சாலையில் சென்ற கார் வெடித்து சிதறியது. இதில் அதே பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

இந்நிலையில் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் நேரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் சோதனை செய்த போது அங்கு வெடிகுண்டு தயாரிக்கும் பல்வேறு மூலப்பொருட்கள் உள்ளிட்ட 109 முக்கிய பொருட்கள் கண்டறியப்பட்டது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கருதப்படுவதால் வழக்கு விசாரணை என்,ஐ.ஏ விற்கு மாற்ற தமிழக முதல்வர் பரிந்துரை செய்தார்.

இந்த வழக்கில் இதுவரை 52 சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விசாரணை கோப்புகளை மாநகர போலீசார் என்.ஐ.ஏ விடம் ஒப்படைத்தனர்.



இதையடுத்து, உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். இதில் முதல்முறையாக சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே என்.ஐ.ஏ அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணையை துவங்கி உள்ளனர்.



அதற்கு முன்னதாக அப்பகுதி முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் கண்காணிக்கும் பணியை மாநகர போலீசார் ஈடுபட்டனர்.



இந்நிலையில், சுமார் நான்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே ஆய்வை துவங்கினர். இந்த நிலையில் தற்போது சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்ற அதிகாரிகள் உள்ளூர் மக்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.



மேலும் இந்த வழக்கை விசாரித்த மாநகர தனிப்படை போலீசில் சில ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் விசாரணைக்கு செல்ல இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...