பாஜகவை யாராலும் அழிக்க முடியாது - மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் பேச்சு

கோவை பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் சுமார் 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.


கோவை: மதுக்கரை மார்க்கெட் பகுதியில் திமுக அரசை கண்டித்து கோவை பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் வசந்தராஜன்:-

தமிழின் பெருமை நமது பாரத பிரதமர் மோடி அனைத்து இடங்களிலும் பேசி வருகிறார். தமிழை வளர்ப்போம் என கூறும் தற்போதைய அரசுக்கு தமிழ் தாய் வாழ்த்தை கூட பாடத் தெரியாது. தமிழ் பாட புத்தகங்களில் வரும் பாடங்களை பார்த்தால் பயமாக உள்ளது.

இன்று அம்மா என்று யாரும் அழைப்பதில்லை மம்மி என்று தான் அழைக்கிறார்கள் அந்த அளவில்தான் தமிழ் உள்ளது என பேசினார்.

அவரை தொடர்ந்து பேசிய மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் கூறியதாவது:-



தமிழகத்தில் திமுகவின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. இந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற பெயரில் தமிழை அழித்து வருகின்றனர். அமைச்சர்கள் மற்றும் அவர்களது பினாமிகள் நடத்தும் பள்ளிகளில் மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை வைத்துள்ளனர்.

அது மட்டுமல்ல அங்கு தமிழில் பேசினால் ரூ. ஆயிரம் வரை அபராதம் விதிக்கிறார்கள். கடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 44,500 பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதுதான் தமிழை வளர்க்கும் விதமா என கேள்வி எழுப்பினார்.

மேலும் பாஜகவை யாராலும் அழிக்க முடியாது. குறிப்பாக பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ராகுல் இருக்கும் வரை பாஜகவை அளிக்க முடியாது என தெரிவித்தார். ஏனென்றால் காந்தி என்ற பெயரில் ஏமாற்றி வரும் ராகுல் கோவாவில் காலடி வைத்தார்.

7 எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு வந்தனர். அதேபோலத்தான் ராஜஸ்தான் மாநிலத்திலும் நிகழ்ந்தது. அவர் இதே போல் இந்தியாவில் அனைத்து பகுதிக்கும் செல்ல வேண்டும். இறுதியாக அவர் டெல்லி வரும்போது தற்போதைய பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக இருப்பார் என தெரிவித்தார்.

நாங்கள் PFI அமைப்பை தடை செய்ய தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போதைய அரசு அவர்களை கண்டுபிடித்து அந்த அமைப்பை தடை செய்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும்.

குறிப்பாக பொள்ளாச்சி தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் எனக் கூறிய அவர் வரும் 2026 தேர்தலில் தமிழகத்தில் பாஜக தான் ஆட்சி அமைக்க உள்ளது. அதை தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு யாராலும் பாஜக ஆட்சியை அசைக்க முடியாது இறுதியாக தமிழை அழிக்க நினைக்கும் திமுக விற்கு இது கடைசி ஆட்சியாக இருக்க வேண்டுமென தெரிவித்தார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...