ஊட்டி வட்டத்துக்கு உட்பட்ட நஞ்சநாடு மற்றும் குருத்துக்குளி பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யபட்டிருந்த நிலம் மீட்பு

ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி தலைமையில் நஞ்சநாடு மற்றும் குருத்துக்குளி பகுதிகளில் நீா்நிலையை ஆக்கிரமித்து கேரட் மற்றும் மலைக் காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்த இரண்டு ஏக்கா் நிலங்கள் மீட்கபட்டன.


நீலகிரி: தமிழகத்தில் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா், கூடலூா் ஆகிய 3 வருவாய் கோட்டங்களில் கால்வாய்கள், நீரோடைகள், அணைகள் ஆகிய பகுதிகளில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என வருவாய்த் துறையினா் அளவீடு செய்து வருகின்றனா்.

இதில் ஊட்டி வட்டத்துக்கு உட்பட்ட நஞ்சநாடு மற்றும் குருத்துக்குளி பகுதிகளில் ஓடை புறம்போக்கு நிலம் 2 ஏக்கா் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தில் விவசாய பணிகள் ஏதும் மேற்கொள்ளக் கூடாது எனவும், அதில் இருந்து வெளியேறுமாறும் வருவாய்த் துறை சார்பில் ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

ஆனாலும் அவா்கள் வெளியேறவில்லை. இதைத் தொடா்ந்து ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி தலைமையில் வருவாய் ஆய்வாளா் இளங்கோ குரு, கிராம நிர்வாக அலுவலா் பிரியதா்ஷினி மற்றும் வருவாய்த் துறையினா் அப்பகுதியில் உள்ள நிலத்தை அளவீடு செய்தனா்.

அப்போது, ஆக்கிரமிப்பு இடத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள 2 ஏக்கா் நிலத்தில் கேரட் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த இடம் மீட்கப்பட்டு, நீா்நிலை புறம்போக்கு நிலம் என அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...