கோவை கிணத்துக்கடவு தினசரி சந்தையில் தக்காளி விலை கடும் சரிவு - கிலோ ரூ.16க்கு ஏலம் போனதால் விவசாயிகள் ஏமாற்றம்

கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.16 வரை மட்டுமே வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


கோவை: கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் பகுதியில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள், இந்த தினசரி காய்கறி சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த வாரம் வரை ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 30 முதல் 35 ரூபாய் வரை ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் தக்காளியின் விலை மளமளவென சரிந்தது.

இதனிடையே தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி பத்து ரூபாய் முதல் 16 ரூபாய் வரை மட்டுமே வியாபாரிகள் ஏலம் எடுத்ததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

தீபாவளிக்கு முன்பு பெய்த மழையால் கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதே இந்த விலை சரிவுக்கு காரணம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...