கோவையில் தூய்மைப்பணியாளர்கள்‌ கோரிக்கைகள்‌ குறித்து தொழிற்சங்கங்கள்‌ உடன்‌ பேச்சுவார்த்தை நடப்பு

கோவையில் குப்பை எடுப்பதற்கு முதற்கட்டமாக 100 பேட்டரி வாகனங்கள்‌ வாங்கப்படும் என தூய்மைப்பணியாளர்கள்‌ கோரிக்கைகள்‌ குறித்து நடைபெற்ற தொழிற்சங்கங்களுடான பேச்சுவார்த்தையில் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ உறுதியளித்துள்ளார்.



கோவை: மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ நேற்று கோயம்புத்தார்‌ மாநகராட்சிக்கு சொந்தமான பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ தூய்மைப்பணியாளர்கள்‌ கோரிக்கைகள்‌ குறித்து தொழிற்சங்கங்கள்‌ உடன்‌ பேச்சுவாத்தை நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது:

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ பணியாற்றும்‌ தூய்மைப்பணியாளா்களின்‌ வருகைப்‌ பதிவேடு காலை 7.00 மணி வரை மட்டுமே வருகை பதிவு செய்து கையொப்பமிட அனுமதிக்கப்படும்‌.

மேலும் மாநகராட்சியில் பணியாற்றும்‌ தூய்மைப்பணியாளர்களுக்கு குப்பை எடுப்பதற்கு உதவும் விதமாக முதற்கட்டமாக 100 பேட்டரி வாகனங்கள்‌ வாங்கப்படும்‌.

தூய்மைப்பணியாளர்களுக்கான வார விடுமுறை ஒருநாள்‌ சுழற்சி முறையில்‌ விடுமுறை வழங்கப்படும்‌.

ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களின்‌ ஊதிய உயர்வு குறித்து மாநகராட்சி நிர்வாகத்தின்‌ சார்பில்‌ இறுதி முன்மொழிவுகள்‌ வருகின்ற நவம்பர்‌ 5ம்‌ தேதிக்குள்‌ அனுப்பி வைத்து உரிய தகவல்‌ தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு தெரிவிக்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு. பிரதாப்‌ தெரிவித்தார்‌.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷர்மிளா, பொது சுகாதாரக்குழு தலைவர்‌ மாரிச்செல்வன்‌, தொழிற்சங்கங்களின்‌ கூட்டமைப்பு பிரதிநிதிகள்‌ பங்கேற்றனர்‌.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...