கொடிசியா சாலையில் கஞ்சா விற்ற பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டது

கோவை கவுண்டம்பாளையம் காந்தி நகரை சேர்ந்த கஞ்சா விற்ற சுகுணா என்ற பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு எழுதியது கோவை கோர்ட்.



கோவை: கோவை மாநகர பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் இரவு நேர ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ந் தேதி பீளமேடு போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது அவர்கள் கொடிசியா சாலையில் உள்ள மண்டல அறிவியல் மையம் அருகே வந்தபோது கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் கோவை கவுண்டம்பாளையம் காந்திநகரை சேர்ந்த சொக்கநாதன், அவருடைய மனைவி சுகுணா (வயது 51) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த தம்பதியை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் ரூ.3 ஆயிரத்து 600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இது தொடர்பாக போதைப்பொருள் வழக்குகள் கோர்ட்டில் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சிவக்குமார் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கும்போதே சொக்கநாதன் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து சுகுணா மீது மட்டும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது, இதைதொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட சுகுணாவுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி லோகேஸ்வரன் தீர்ப்பு கூறினார்.

அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து போலீசார் சுகுணாவை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...