வால்பாறை காவல்துறை சார்பில் 10வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கஞ்சா போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வால்பாறை காவல்துறை ஆய்வாளர் கற்பகம் தலைமையில், பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இதை தொடர்ந்து வால்பாறை பகுதியில் உள்ள 21 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுக்கும் சென்று போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று 10வது வார்டுக்கு உட்பட்ட சிறுவர் பூங்கா பகுதியில் நகர மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் காவல்துறை ஆய்வாளர் கற்பகம் பொது மக்களுக்கு போதை பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு மேற்கொண்டார் போதை பொருட்கள் பயன்படுத்த மாட்டோம் என்றும் அனைவரும் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் சுதாகர் மற்றும் எல்.பி.எஃப் தோட்ட தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் கோலிக்கடை கணேசன் மற்றும் உதவி ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.